144 கு று ங் .ெ த ைக க்
அவள் இருக்குமிடத்துக்கு நீ நெருங்கவே முடியாது. வீட்டுக் குள்ளே பூட்டி வைத்திருக்கிறார்கள்.”
நிரை வளை முன்கை கேர் இழை மகளிர் இருங் கல் வியல் அறைச் செங் தின பரப்பிச் க்னே பாய் சோர்வு இடை நோக்கி, சினே இழிந்து, பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் வெற்பு அயல் கண்ணியதுவே - வார் கோல் வல் விற் கானவர் தங்கைப் பெருங் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
-இருந்தையூர்க் கொற்றன் புலவன்
126. அறைக்குள் இருந்தது அம்பலம் ஏறுகிறது
கள்ளக் காதல் எவ்வளவு நாள் நடக்கும் ? நீண்டநாள் கடக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சந்திப்புக்குச் சமய மில்லை. அவள் வருந்துகிருள். கண்டாள் தோழி. அவளது வருத் தம் போக்க விரும்பினள்.
வருத்தம் போக்கும் வழி எது? வழி ஒன்றே.
அம்மாவிடம் உனது இரகசியக் காதலைச் சொல்வி விடுகிறேன்’ என்றாள் தோழி.
ஐயோ சொல்லாதே’ என்றாள் அவள்.
சொல்லாமல் என்ன செய்வது ? சொன்னலாவது அவர் கள் சம்மதிக்கச் செய்யலாம். துணிந்து சொல்லிப் பார்க்கிறேனே. அதல்ை என்ன ?” என்றாள் அவள். குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் புனம் உண்டு கடிந்த பைங் கண் யானே நறுந் தழை மகளிர் ஒப்பும் கிள்ளையொடு குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் பணிக் குறை வருத்தம் வீட, துணியின் எவனே - தோழி! - கம் மறையே ?
-உழுந்தினம் புலவன்