கா ட் சி க ள் 153
‘குவளே மலர் மணம் வீசுகிறது நின் கரும் கூந்தலிலே! செக்கச் சிவந்த நின் வாயிலே தேன் சுவைக்கிறது! மை அழகி! என் மன மோகனங்கி, அஞ்சாதே! கடல் சூழ்ந்த இங்கில உலகம் அப்படியே எனக்குக் கிடைப்பதாயினும் சரியே! உன்னேப் பிரிய மாட்டேன்’ என் முன்.
குவளே காறும் குவை இருங் கூந்தல், ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண் பல் தித்தி, மாஅயோயே! நீயே, ‘அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே; யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும், விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
-சிறைக்குடி ஆந்தையார்
138 ‘ஆளை, ஆளைப் பார்க்கிருன்’
i
“அதோ பாரடி அவனே’’
“என்ன செய்கிருன்?”
‘பின் னடியே வந்து கொண்டிருக்கிருன்’
“வந்து என்ன செய்கிருன்?”
“என்ன வோ போலப் பார்க்கிருன். பல்லே இளிக்கிருன்’’
‘இளித்து விட்டுப் போகட்டுமே!’
‘போகட்டுமா? ஒரு நாளா? இரண்டு நாளா? தினந்தோறும் வருகிருனே!”
‘வ்ரட்டுமே!’
‘வரட்டுமா? தெருவிலே நம் பின்னே வந்து கொண்டே இருக்கிருன். வீட்டு வாசல் வரை வருகிருன். தெருவிலும் வருகிருன்’
“என்ன வேண்டும் என்று கேட்டுத் தொலையேன்”
‘சொல்ல மாட்டேன் என் கிருனே. ஏதோ சொல்ல கினைக்