க ச ட் சி க ள் 207
ா என்னவோ?’’ காதல் நினைவு ; காதலி கினைவு!’
சுரங்தலைப் பட்ட நெல்லிஅம் பசுங் காய் மறப் புலிக் குருளே கோள் இடம் கரக்கும் இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் தளே அவிழ் பல் போது கமழும் மை இருங் கூந்தல் மடங்தை நட்பே.
-பாலே பாடிய பெருங்கடுங்கோ
195. ஆசையும் பூசையும்
“குகையிலே கோயில் கொண்டு இருக்கும் துர்க்கைக்குப் பூசை செய்யவில்லையே!” என்றாள் தோழி.
அதல்ை என்ன ?” என்றாள் அவள்.
கையிலே காப்பு நூலைக் காணுேமே?”
- நூல் கட்டா விட்டால் என்ன ?”
நோன்பு இருக்க வில்லையே!”
- அதனுல் என்ன ?”
‘நல்ல சகுனம் எதுவும் பார்க்க வில்லைலே 1”
- அதனுல் என்ன ?”
விரிச்சி கேட்பமே 1 மங்கலச் சொல் யார் வாயிலிருந்தாவது வராதா ?”
கேட்கா விட்டால் என்ன ?”
“என்னடி எதுவுமே வேண்டாமா ?”
“அடியே, அவர்தான் பிரிந்து போயிருக்கிறார். இமைப் பொழுது பிரிந்தாலும் சகியாத என்னைப் பிரிந்திருக்கிறார், விரை வில் வர வேண்டும். அது அவரது கடமை. அதை யுணர்ந்து அவர் வராவிட்டால் இவற்றால் என்ன பயன் கொற்றவைக்குப் பூசையிடுவதோ, நூல் கட்டுவதோ, கோன்பிருப்பதோ என்ன செய்து விடும் ?”