கா ட் சி க ள் 3 15
206. தோ ழி காட் டி ய வ ழி
‘ஏதடா, பருவம் வந்த பெண் ஆயிற்றே. மனத்தில் என்ன எண்ணியிருக்கிருளோ. அதை அறிந்து ஆவன செய்ய வேண் டும் என்ற யூகம் தாய்க்கு இல்லை. வேறு என் செய்வது ?” என்று கேட்டாள் தோழி.
‘அதற்கு வழி ஒடிப் போவதுதான?’ என்று கேட்டாள் அவள்.
வேறு என்ன இருக்கிறது ?” ‘ஊரிலே ஏச்சும் பேச்சுமாயிருக்குமே !’ ‘இருந்துவிட்டுப் போகிறது. அதனால் உனக்கு என்ன ?” ‘நீ அவருடன் ஜம்மென்று போ. நெல்லிக்காயைத் தின்று விட்டுப் பிறகு நீர் குடித்தால் எப்படியோ அப்படி இரு.”
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, ஆனது அலேக்கும் அறன் இல் அன்னே தானே இருக்க, தன் மனை ; யானே, கெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசில்ை, அவரொடு - சேய் காட்டு, விண் தொட கிவந்த விலங்கு மலேக் கவாஅன், கரும்பு நடு பாத்தி அன்ன, பெருங் களிற்று அடிவழி கிலேஇய நீரே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
207. சொன்ன எல்லாம் மறந்தாளோ?
நாட்கள் பல சென்றன. சென்றவர் வரவில்லை. வருவார் வருவார்’ என்று எதிர்பார்த்தாள். வந்தால்தானே. வரமுடியா விட்டால் தூது விடலாம் அல்லவா !
- தூதுகட்ட விடவில்லையே! சரி. நமக்குத்தான் துனது விட வில்லை. நம்மை மறந்து விட்டார் என்றே வைத்துக்கொள்வோம். நமது தோட்டத்தில் உள்ள இந்த வேங்கை மரத்தையுமா மறந்து