334 கு று க் .ெ த ைக க்
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்த நீள் இடை அழப் பிரிங்தோரே ?
-கடம்பனூர்ச் சாண்டிலியன்
218. பணியும் வந்தது காதலனும் வந்தான்
“பின் பனிக்காலம் வந்து விட்டது. கதிரவன் மலை வாயில் விழுந்தான். ஆணும் பெண்ணுமாக வெயிலுக்கு கிழலில் ஒதுங்கித் தூங்கிய மான்கள் வந்தன. பயறு முற்றிய கதிர்களைத் தின்றன. . .
“எழு! வருந்தாதே! அதோ உன் காதலன் வந்து விட்டான். இனி யுேம் இந்த மான்களைப் போல இணைபிரியாது தூங்கலாம்” என்றாள் தோழி.
திரிமருப்பு இரலே அண்ணல் நல் ஏறு அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, வீ ததை வியல் அரில் துஞ்சி, ப்ொழுது செல, செழும் பயறு கறிக்கும் புன்கண் மர்லே, பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் வந்தன்று, பெருவிறற் தேரே-பணத் தோள் விளங்கு நகர் அட்ங்கிய கற்பின் கலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.
-பெருங்குன்றுார் கிழார்
219. காதலி எனும் செல்வம்
‘பொருள் தேடப் போகிருராமே” என்றாள் அவள்.
‘உன்னே விடச் சிறந்த பொருளும் அவருக்குண்டோ?” என் ருள் தோழி.
‘போனுல் என்ன செய்வேன்?’
“நீர் இல்லாத பால. கொலைகாரக் கள்வர் மலிந்த இடம். கொள்களயைக் கூட்டுறவாகச் செய்யும் கூட்டம் கிறைந்த வழி.