கா ட் சி க ள் 28
இன்ன அருஞ் சுரம் இறத்தல் இனிதோ - பெரும! - இன் துணைப் பிரிங்தே?
-செல்லுர்க் கொற்றன்
29. குளிரும் காதலும்
“முன் பனிக் காலத்தின் தொடக்கத்திலே வருவேன் என்று சொல்லிப் போனன் அவன். கூதிர் காலம் முடியும் சமயம்,
‘இன்னும் வர வில்லையே! எங்கேயோ வெகு தொலைவில் இருக்கிருரே! என்ன செய்வது, எவ்வாறு ஆற்றுவது?’ என்று வருந்துகிருள் தோழி.
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் வென்று எறி முரசின் கன் பல முழங்கி, பெயல் ஆனதே, வானம்; காதலர் கனி சேய் காட்டர்; நம் உன்னலரே; யாங்குச் செய்வாம்கொல் - தோழி! ஈங்கைய வண்ணத் துய்ம்மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!
-கருவூர்க் கதப்பிள்ளை
20. சரி என்றாள் முன்னே பின்னே பயந்தாள்
யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஒடிப் போவது என்று ஏற்பாடாயிற்று. “சரி” என்றாள் அவள். சம்மதம் என்றான் அவன் குறித்த நாளில் அவன் வந்து விட்டான். அழைத்துக் கொண்டு போக. ஆனல் அவளுக்கு தைரியமில்லே. கையும் காலும் துவண்டன. தீயிலிட்ட மலர் போல் துவண்டாள். நாளேக்கு ஆகட்டுமே என் ருள்.
சரி’ என்று நீ சொல்லியதால்தானே இந்த ஏற்பாடு செய்தேன். இப்போது இப்படி நடுங்குகிருயே! நான் என்ன