கா ட் சி க ள் 25 I
354. இரவும் எ ரு ைம யும்
‘வருந்தாதே’ என்றாள் தோழி.
‘கான் என்னடி செய்வேன்? அவர் வரக் காணேன். இரவு துாக்கம் வரவில்லை. எருமை தன் கொம்பை அசைக்கும் போதெல் லாம் அதன் கழுத்து மணி யோசை கேட்கிறதே தவிர, அவர் வரும் தேர் மணியோசை கேட்கவில்லேயே 1’ என்று ஏங்கிள்ை.
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ - மழை கழுஉ மறந்த மா இருங் துறுகல் துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் இரும் பல் குன்றம் போகி, திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே ?
-மதுரை மருதன் இளநாகனர்
255. மணி ஓசை கேட்குதம்மா !
மாரிக்காலம். மாலே நேரம். மணி யோசை கேட்கிறது.
“மணியோசை கேட்கிறதே!’ என்றாள் அவள்.
ஆமாம். தேரின் மணி யோசையோ அல்லது மாட்டின் மணி ஒசையோ ?’ என்றாள் அவள்.
“அந்த முல்லே படர்ந்த கல்லின்மீது ஏறி நின்று பார்ப்போம் வா’ என்றாள் அவள்.
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் கண்டனம் வருகம் , சென்மோ - தோழி! - எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ ? செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு