264 குறு ந் தொ ைக க்
குருந்தொடு அலம்வரும் பெருங் தண் காலேயும்,
‘கார் அன்று என்றி.ஆயின்,
கனவோ மற்று இது ? வினவுவல் யானே.
இளங்கீரந்தையார்
275. மு. ல் லை த ரு ம் தொல் லே
“பொருள் பொருள் என்று இப்படி பொருள் ஆசை கொண்டு போய்விட்டாரே. இளமை iளுகிறதே. எங்கே இருக்கிருரோ? என்ன செய்கிருரோ? கார் காலத்திலே வரு வேன்’ என்றாரே! இன்னும் வரவில்லேயே கார் வந்துவிட்டதே என்னு ஏங்கி வாடுகிறேன். நான். இன்னுமா உயிர் வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டுக் கேலி செய்து நகைப் பதுபோல் அரும்பி விட்டதே முல்லை’
காதலன் வரவு நோக்கி வாடும் காரிகையின் உள்ளத்து எதிரொலி இது. ‘இளமை பாரார் வளம் நசைஇச் சென்றாேர் இவனும் வாரார்; எவணரோ ? என, பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் தொகு முகை இலங்கு எயிறு ஆக நகுமே - தோழி ! - நறுங் தண் காரே.
-ஒக்கூர் மாசாத்தியார்
276. வந்தால் என்ன ? வராவிட்டால் என்ன?
‘வருந்தாதே. வந்துவிடுவார்’ என்றாள் தோழி.
“ஆமாம். அவர் வந்தால் என்ன வராவிட்டால்தான் என்ன ?’ என்றாள் அவள்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“ஆமாம். வாடை வீசுகிறதே. அவள் எப்படி வருந்து கிருளோ என்று எண்ணினரா ? வந்தாரா ? இல்லையே. இனி கான் எப்படி உயிர் தரிப்பேன் 1 இறத்து போவேன். அதன்