பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கு று ங் .ெ த ைக க்

தாக்கம் வராமல் யுேம் துன்புற வேண்டியதில்லை. தூங்கவில்லே என்பது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காகத் துாங்குவது போல் பாசாங்கு செய்யவும் வேண்டியதில்லை” என்றாள்.

“என்னடி, என்னவோ கற்பனை செய்து கொண்டே போகிறாய்!”

“ஆமாண்டி ஆம்! அவர் வந்து விட்டாரடி பரிசம் போட!’ ‘வந்து விட்டாரா?” *ஆம். இனி உன்னே மணந்தே செல்வாரடி!”

ஒறுப்ப, ஒவலர் மறுப்ப, தேறலர் இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே! தமியர், உறங்குங் கெளவை இன்முய்! முனது யானையங் குருகின் கர்னலம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பு:இசை வெரும் குட்டுவன் மாங்தை யன்ன எம் குழல் விளங்கு ஆய் துதல் கிழவனும் அவனே.

-கொல்லிக் கண்ணன்

288 மீட்சியும் மாட்சியும்

அவள் கருவுற்றிருந்தாள். அவன் என்ன செய்தான்? ஆடல் மகளிருடன் ஆனந்தமாக இருந்தான்.

காலையிலே எழுவது. வண்டியைப் பூட்டுவது. ஆடல் மகளிர் வீடு செல்வது. ஆடிப்பாடி மகிழ்வது. இப்படியே காலம் போய்க் கொண்டு இருந்தது.

பேறு காலம் வந்தது. அவள் தாய் ஆளுள். ஆண் குழந்தை யைப் பெற்றாள். செய்தி கேட்டான் அவன். குழந்தையைப் பார்க்க விரும்பின்ை. ஆனல் அவள் கோபிப்பாளோ என்ற பயம். ஆட்கள் மூலம் சொல்லி அனுப்பின்ை. ‘ஐயா வருகிறார்’ என்றான் வந்தவன். வேரட்டுமே” என்றாள் அவள். தோழிக்கு இது பிடிக்கவில்லை. என்னடா என்றால் ஆடல் மகளிர் வீட்டிலே கிடந்தான். இப்போது குழந்தை பிறந்தது