க ட் சி க ள் 337
மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.
-மாலைமாறன்
368. நினைவும் நித்திரையும்
இரவு நேரம், தூக்கம் வரவில்லே அவளுக்கு. பெருமூச்சு விடுகிருள்; கண்ணிர் வடிக்கிருள்.
“சும்மா ஏன் அவனேயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? பேசாமல் தூங்கு’ என்றாள் தோழி.
“ஆமாம் 1 ஆமாம் மான் குளம்பு போன்ற இலையும், குதிரையின் கழுத்து மணி போன்ற மலரும் உடைய அடும்ப மலர் மிக்க கடல் காடனே நான் கினைத்தேன். அதனுல் தூக்கம் வரவில்லை. இனி கினையாதிருக்கிறேன். தூக்கம் வரட்டும்’ என்றாள்.
கினையாதிருக்கவும் இயலாது ; தூக்கமும் வராது என்பது குறிப்பு.
மான் அடி அன்ன கவட்டிலே அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை உள்ளேன் - தோழி ! - படீஇயர், என் கண்ணே.
-கம்பி குட்டுவன்
369, அழகைத் தா, அப்பால் போ!
“போய் வருகிறேன்” என்றான் அவன்.
எங்கே ?’ என்றாள் தோழி. பொருள் தேட’’ *பிரிவது நிச்சயமா ?”
“ஆம்”
23