3.54 கு று ங் .ெ த ைக க்
கண்ணிய ஆண்மை கடவது அன்று என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன்-தோழி-என் வன்களுனே.
-மிளைகிழான் கல் வேட்டன்
394. கரும்பு தின்னக் கூலியா?
“அதோ! தெரிகிறதே! அதுதான் எங்கள் கல்லூர். ஒரு புறம் கடல். மறுபுறம் கழி. தாழையிலே வந்து அகிலமோதும். அந்த மணல் மேட்டிலே உனது தேரை நிறுத்திவிட்டு இரவு இவள் ஆசை திரத்'தங்கிப் பின் போனல் என்ன? தவரு?” என்று கேட்டாள் தோழி. யாரைப் பார்த்து? கட்டழகன் ஒரு வனைப் பார்த்து.
அவன் என்ன? முடியாது என்றா சொல்வான்?
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுங்தேர் வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் தங்கினிர்ஆயின், தவருே - தகைய தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலதாழை தைஇய தயங்குதிரைக் கெர்டுங் கழி
மென ஒலிக்கும் ஆங்கண் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?
-அண்டர் மகன் குறுவழுதி
395. அழகைத் தா என்று கேட்பேன்!”
நெய்தல் நிலத்திலே காரை என்ன செய்கிறது? அடம்ப மல ரைத் தன் காலால் சிதைக்கிறது. சிதைத்து மீன் உண்ணுகிறது.
நெய்தல் கிலச் செல்வன் ஒருவனுக்கும் இதே குணம்தான். காதலியைக் கண்டான். இன்பம் துய்த்தான். பிறகு பரத்தையி டம் சென்றான். காதலி வருந்துகிருள். அப்போது தோழி சொல்கிருள் :