360 குறுங் .ெ தா ைக க்
ப ா டி ய பு ல வ ர் க ள்
அஞ்சில் ஆங்தையர்
ஆதன் தந்தையார் என்பது ஆங்தையார் என்றாயிற்று. அஞ்சில் என்பது ஒர் ஊர். அஞ்சில் என்ற ஊரைச் சேர்ந்த ஆதன் என்பவரது தந்தையார் இவர்.
அண்டர் மகன் குறுவழுதியார்
வழுதி என்பது பாண்டியர்களின் பெயர். இக்கவிஞர் பாண்டியர் மரபிலே வந்தவர்.
அணிலாடு முன்றிலார்
அணில் விளையாடும் முன்றில் பற்றிப் பாடினதால் இவ ருக்கு இப் பெயர் வந்தது.
அரிசில் கிழார்
அரியில் என்பது அரிசில் என்று மருவியது. அரியில் என்பது அரியலூரின் பெயர். அரியலூர் திருச்சி ஜில்லா வில் உள்ளது. கிழார் என்பது வேளாளருக்கு உரிய பட்டப் பெயர்.
அள்ளுர் நன்முல்லையார்
அள்ளுர் என்பது பாண்டிய நாட்டிலே சிவகங்கைக்குப்
பக்கத்திலே உள்ளதோர் ஊர். இந்த ஊரைச் சேர்ந்த புலவர் இவர்.
ஆதி மந்தியார்
வஞ்சிக்கோளுகிய ஆட்டன் அத்தியின் மனைவியார் இவர். தமிழ் நாட்டின் முதல் பெண் புலவர்.