40 கு று ங் ெத ா ைக க்
இன்புறுகிருன், கொம்புத் தேனேக் குடித்து விட்டது போலவே எண்ணம்!” என்றாள் அவள்.
‘அந்த மாதிரி என்ன ?’ என்று கேட்டாள் தோழி. “அந்த மாதிரி இன்பமடைந்தேன் நான்’’. ‘முடவன் கொம்புத் தேனேக் குடித்து இன்புற்றது மாதிரி நீயும் இன்புற்றாயாக்கும்!”
“ஆம்’ ‘எப்படி? அதைச் சிறிது விவரமாகச் சொல்லேன்’ ‘என் காதலனைக் கண்ணுல் கண்டாலே போதுமடி. பேச வேண்டாம். பிறிது ஒன்றும் வேண்டாம். இன்பமாயிருக்கும் எனக்கு!”
“அவனேயே பார்த்துப் பார்த்து இன்பம் கொள்வாயோ?” “ஆம்’ ‘அந்த முடவன் செய்தது மாதிரி’ “ஆமாண்டி !” “அவனைப் பார்த்து ?” “துன்பமாயிருக்கு’.
குறுங் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் பெருந்தேன் கண்ட இருங் கால் முடவன், உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, சுட்டுபு நக்கியாங்கு, காதலர் நல்கார் நயவார் ஆயினும், பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. r -பரணா
14. ஊ ைம யு ம் உவமை யும்
“என்ன சங்கதி? ஏன் இப்படி வர வர இளைத்துத் துரும்பாகிறாய்?”
‘ என்ன செய்வது ? ஊமையன் காவல் காத்தது மாதிரி
இருக்கிறேன்’
“அதென்ன ? ஊமையன் காவல் ?”