பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கு று ங் தொகை க்

தோழனே! நீ சொல்வது சரி. அறிவும், படிப்பும், பெருமை யும் உடையவர்கள். மனதைக் கண்டபடி விடக் கூடாதுதான். அதிலும் பெண்கள் விஷயத்தில். ஆனல் ஒன்று. பெண் என்றால் பெண் அவள்தானடா ? என்ன அழகு 1 என்ன அழகு கண்ட வர் காமுறும் காரிகையடா! அவளது கண்களிலேதான் எத் தகைய குறு குறுப்பு 1 என்ன துடி துடிப்பு! அவளது கூந்தலின் அழகை என்ன என்பேன் 1 மார்பின் எடுப்பை என்ன என்று சொல்வேன் !’

‘அடேய் கொஞ்சம் நிறுத்து பயித்தியம் பிடித்து விடப் போகிறது’

“கன்றாக மேய்ந்துவிட்டு மடியும் காம்பும் சுரந்து வருகிறது பசு. அதைக் கண்ட உடனே அதன் கன்று ஆவலோடு எப்படித் துள்ளிச் சென்று முட்டி கிற்குமோ! அந்த மாதிரி நின்றாளடா 1”

‘அப்போ ! நீ பசு அவள் கன்று ! இதானே நீ சொல்வ தன் பொருள்”

& 4 ஆம் :

கவவுக் கடுங்குரையள் : காமர் வனப்பினள் ; குவவு மென் முலேயள் ; கொடிக் கூந்தலளே யாங்கு மறந்து அமைகோ, யானே ? ஞாங்கர்க் கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி தாய் காண் விருப்பின் அன்ன, சாஅய் நோக்கினள்-மாஅயோளே.

-சிறைக்குடி ஆந்தையார்

53. பைங்கிளியும் பெண் கிளியும்

“என்னடி இது 1 இன்னும் வரவில்லையே!”

விரைவில் வருவேன் என்றுதானே சொன் னுர், என்ன வோ வரக்காணுமே ‘ -
  • எனது அழகும், வலிவும் அழிந்துபோயின. இன்னும் உயிரோடிருக்கிறேனே !’

விணரில் வருந்தாதே’’