பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i53

அக்கார்காலக் காட்சிகளைக் காணவும் நாணித் தலை தாழ்த் திக்கொண்டாள்.

தன்னக் காண நாணித் தவைணங்கிக்கொண்ட அவளை, அக்கார்காலம், அந்நிலேயோடு விட்டிலது, கொடுமை மிக்க அது, அவளை மேலும் எள்ளி தகைக்க எண்ணிவிட்டது போலும்; மேலும், அதற்கு அவள் மனேயின் முன்புறத்தில், நாள்தோறும் நீர் வார்த்து அவள் வளர்த்த முல்லைக்கொடி யைத் துணையாகக் கொள்ளவும் திட்டமிட்டது. உடனே, அம்முல்லைக் கொடி நிறைய மெல்லிய அரும்புகளே மலரச் செய்துவிட்டது. அவ்வளவே; முல்லை மனம் மெல்லப் படர்ந்து, அம்மங்கை நல்லாளின் மனதைத் தொட்டு விட்டது. கார்காலத்து மழைதான் வந்து வாட்டுகிறது என்றால், அதற்கு இம்முல்லையும் துணைபுரிகிறதே அதுவும் நாமே வளர்த்த முல்ை துணைபுரிகிறதே; இக்கொடுமையை யாரிடம் கூறி நோவேன் என்ற எண்ணம் எழ, மெல்லத் தலை தூக்கி முல்லைக்கொடியை நோக்கினள். பெண்ணே! என் இளமைப் பருவத்தில், நாள்தோறும் நீர் வார்த்து என்னப் பேணி வளர்த்தவள் நீதான்; ஆனல், மலர்கள் என்ற இம்மா நிதியை நாள் பெற, இன்று துணைபுரிவது இக்கார் காலத்து மழையே; ஆகவே, இப்போது, நான் உன் நலனில் நாட்டம் கொள்வது இயலாது; கார்ப்பருவத்திற்குத் துணைபுரிவதே, இப்போதைய என் கடனம் உலகியல் முறையும் அதுவே: வேண்டுமானல் நீயே எண்ணிப் பார்; உன் இளமை எழில் அளித்த இணையிலா நலத்தை நுகர்ந்து இன்புற்றார் உன் கணவர்; அது ஒரு காலம்; இப்போது அவருக்குப் பொருள் வளத்தின்பால் ஆசை உண்டாகிவிட்டது; அவர்க்கு இப் போது தேவை அது ஒன்றே; ஆகவே, அவர் உன்னே மறந்து. சேணெடும் தூரம் சென்றுவிட்டார்; இக்கார்காலத்தில், உன்னே ஓர் இமைப்பொழுதும் பிரியாது, உன் அண்மையி லேயே வாழ வேண்டிய அவர், எங்குள்ளாரோ? அறிந்து கொள்ளவும் முடியாத இடத்திற்குப் போய்விட்டார்; இது தான் உலகியல். இதை நீ உணர்ந்து கொள்ளவேண்டும்;