58
கிறது. காதலர் பிரிவால் கற்பு வாழ்வு கிட்டா தாயின், அந் நிலையில் அதுவும் நம்மைவிட்டு அகலும்’ எனக்கூறிக் கலங் கிளுள். காதலன், தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போகத் துணிந்துவிட்டான் என்பதை அறிந்து கலங்கும் அந்நிலையிலும், “நாம் இழக்கக் கூடியது உயிர் ஒன்றே; சிறந்த பொருள் வேறு எதுவும் இல்'ை; எனத் தன் இழப்புப் பெரிதன்று எனக் கருதுவாள்போல் கூறிய அவள் சொல் திறம் மகிழ்தற்கு உரியது. -
1. விரிநீர்ச் சேர்ப்பன், கீப்பின், ஒருநம் இன்னுயிர் அல்லது பிறிது ஒன்று எவனே, தோழி! நாம் இழப்பதுவே ,
அவன் ஞாயிறு, நான் நெருஞ்சி :
பொருள் ஈட்டும் கருத்துடிையளுய்க் காதலன் பிரியத் துணிந்தான் எனக் கேட்ட காதலி, தொடக்கத்தில் கலங் கிளுள் என்றாலும், கணவன் மனைவியர்க்கிடையே இருக்க வேண்டிய உறவுமுறை நினைவு வரப்பெற்றதும் அக்கலக்கத் தைக் கைவிட்டாள், கணவன் மனைவியர்க்கிடையே கருத்து வேறுபாடு இருத்தல் கூடாது; மனேவி தனக்கெனத் தனிக் கருத்துடையளாதல் கூடாது. அவன் கருத்து ஒன்றாக, அவள் கருத்து வேருக வேறுபடுதல் கூடாது. அது ஒன்று பட்ட உள்ளமுடைமைக்கு ஊறுவிளைவிக்கும், கணவன் கருத்தே அவள் கருத்தாதல் வேண்டும்; அவன் எதை நினைக் கிருனே, அதையே அவளும் நினைத்தல் வேண்டும். அவன் ஆசை எதுவோ, அதுவே அவன் ஆசையாதலும் வேண்டும். இவ்வுறவு முறையை உணர்ந்தவள் அவள். அதனல் காதல்
2 குறுந்தொகை : 334. இளம்பூதனர். விரிநீர்.பரந்த நீர்நிலை, கடல்; சேர்ப்பன்-நெய்தல் நிலத் -இவன்; நீப்பின்-பிரிந்தால். நாம் இழப்பது பிறிதொன்று
வன் என மாற்றுக.