பக்கம்:குறும்பா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா

கோட்டைச்சுவர் உயரம் எண்ணி அயர்ந்தேன்
கொள்ளை போகா திருக்க' என்றார் பயந்தேன்!
நாட்டை ஆள்வோர் தம்மை மக்கள்
நம்பிடாத முன்னோட்டமாய்
நன்றுசெய்த முன்காணியை வியந்தேன்!
O

நம்பிக்கைநீ வைத்திடடி என்றான்
நம்பி கையை வைத்துஅவளை வென்றான்;
நம்பிக்கையை வைத்தவன்பால்
நாலாறு திங்களாக்கி
நல்வயிற்றுக்குள் அவனே நின்றான்!

O

அறிஞர்களின் பழக்கங்களைத் தேடி
அவற்றை எல்லாம் பின்பற்றினான் மாரி;
செறியாமை, இளைப்பிருமல்,
நீரிழிவு, குருதியழுத்தம்,
சொறிசிரங்கின் கூட்டமானான் கூடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/12&oldid=1200695" இலிருந்து மீள்விக்கப்பட்டது