பக்கம்:குறும்பா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கோவேந்தன்


வெகு நூல்கள் படித்ததில்லை; போனால்
வெளியுலகும் தெரியாது; ஆனால்
தகுதியிலாப் போலிகளின்
தாளத்திலே கழித்துவிட்டான் வாணாள்;
வெகு நேரம் மேடை ஏறிப்
பேசமட்டும் கற்றுக்கொண்டான் தானாய்!



ஒநாயினைப் பிடித்து வந்தாள் குறத்தி
ஒழுங்குபடத் தன்னுடன் வற்புறுத்தி,
ஆனாத நல் அன்புடனே
அறிவுரைகள் நல்லுணவும் அருந்திப்
பேணா வகை பேணினாலும்
பிடித்தோடிற்றே கோழிகளைத் துரத்தி!



பதினோரு பேர் ஆடுகிற ஆட்டம்
பத்தாயிரம் பேர் பொழுதழிக்கும் கோட்டம்.
முதிரா அறிவு முட்டாள் எலாம்
பகரணீயில் மொய்த்துவக்கும் ஈட்டம்:
உதவாக்கரை பயல்கள் உடல்
உதறி உதறி எடுப்பதுவா ஒட்டம்?



தகுதி தரம் இல்லை என்ற போதும்
தறுதலைகள் கூட்டம் கொண்டு மோதும்
மிகுதியான ஆட்சியிலே
மேம்படுமா நாடு, மக்கள் யாதும்?
வெகுளி எனும் குதிரை ஏறி
விரட்டிடுவார் விளையும் வறுமை தீதும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/53&oldid=1195856" இலிருந்து மீள்விக்கப்பட்டது