பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விதை - விநாயகர்

பொருளில் இருக்கும் கார்போ ஹைடி ரேட்டுகளும் கொழுப்புகளும் புரதங்களும் வெவ்வேறு விகிதங்களில் இருக்கும். எல்லா வற்றிலும் பொதுவாக இருப்பது மாப் பொருள் (Starch). பருப்பு இனங்களிலும், நெல் முதலிய தானியங்களிலும் - இது அதிகம். சர்க்கரை மற்றொரு வகைக் கார்போ ஹைடிரேட்டு. பட்டாணி, சோளம் ஆகிய விதைகளில் இது உண்டு. தேங்காய் போன்றவற்றின் முளைசூழ்தசையிலும், எள், ஆளி விதை, வேர்க்கடலை ஆகியவற்றின் கருவிலும் கொழுப்புகள் மிகுதியாக இருக்கும். இவை எண்ணெய் வித்துகள் எனப் படும். அவரை, உளுந்து, கடலை போன்றவற்றின் விதைகளில் புரதம் மிகுதியாக உள்ளது.

ஒரு தாவரத்தில் உண்டாகும் விதை கள் அனைத்தும் அம் மரத்தின் அடியி லேயே விழுந்து, முளைத்து வளருமாயின் அம்மண்ணிலுள்ள வளம் குன்றி சாரம் அனைத்தும் அற்றுப்போகும். இது நேராத படி, விதைகள் நெடுந்தூரம் அகன்று பரவுவதற்கு இயற்கையில் பலவகைச் சாதனங்கள் அமைந்துள்ளன. சில விதைகள் விலங்குகளின் உடலில் ஒட்டிக் கொண்டு சென்று வேறிடங்களில் பரவும். தாமரை, அல்லி இவற்றின் விதைகள் நீரில் மிதந்து சென்று பரவுகின்றன. மிக இலேசாக உள்ள விதைகள் காற்றில் பரந்து சென்று பரவுகின்றன. பறவைகளும், விலங்குகளும் கனிகளைத் தின்றபின் அவற்றிலுள்ள விதைகளைத் தொலைவில் போட்டுவிடுகின்றன.

விதைகளில் பல நமக்கு மிகவும் பயன் படுகின்றன. கருச்செடிக்கு விதையில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் உணவே நமக்கும் உணவாகின்றது. நெல், கோதுமை, சோளம் முதலிய தானியங்களை நாம் உண்கிறோம். காப்பி, கோக்கோ போன்ற பானங்கள் விதைகளிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஆளி விதை, மிளகு போன்ற விதைகள் நறுமணப் பொருள்களாகும். பருத்தி விதை, ஆமணக்கு விதை, சூரியகாந்தி விதை, எள், தேங்காய், கடலை போன்றவற்றி லிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கும், சோப்பு, நறுமணப் பொருள்கள், அச்சு மை, வர்ணங்கள், பூச்சி மருந்துகள் முதலியன தயாரிக்கவும் பயன்படுகின்றது. ஆல்கஹால், பிளாஸ்ட் டிக், செயற்கை ரப்பர், மருந்துகள் தயா ரிக்கவும் சிலவகை விதைகள் - உதவு கின்றன. அரளி போன்ற சில தாவ ரங்களின் விதைகள் நஞ்சு மிகுந்தவை.

விநாயகர் : ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பர். சில பெரிய ஊர்களில் பல கோயில்கள் இருக்கும். ஆனால் எந்த ஊரிலும் ஒரு பிள்ளையார் கோயில் இல்லாமல் இராது. பிள்ளை யாரையே விநாயகர் என்கிறோம். விக்கி னேசுவரர், கணபதி, கணேசர் முதலிய பல பெயர்கள் விநாயகருக்கு உண்டு.

இந்துக்கள் வழிபடும் முதன்மையான தெய்வங்களுள் விநாயகர் ஒருவர். விநா யகரை வழிபட்ட பின்னரே சிலர் எந்தத் தொழிலையும் தொடங்குவர். அப்போது தான் அத்தொழில் இடையூறின்றி இனிது நிறைவேறும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. விக்கினேசுவரர் என்பதற்கே இடையூறுகளை நீக்குபவர் என்று பொருள்.

சிவபிரானுக்கு மூத்த மகன் விநாயகர் என்று புராணங்கள் கூறுகின்றன. விநா யகரின் முகம் யானையின் தலை வடிவி லிருக்கும். தும்பிக்கையும் தந்தங்களும் உள்ளன. இத்தகைய உருவ அமைப் பிற்குப் பல புராணக் கதைகள் உண்டு. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைக் குறிப் பதே விநாயகருடைய வடிவம் எனக் கூறு வார்கள். அமர்ந்த நிலையிலேயே விநாயகர் சிலை எங்கும் காணப்படினும், நின்ற கோலத்திலும் நடனமாடும் தோற்றத் திலும் சில சிலைகள் உள்ளன. விநாயக ருடைய வாகனம் மூஷிகம் எனப்படும் பெருச்சாளியாகும்.

இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர் களும் ஜைனர்களும் விநாயகரை வழி படுகின்றனர். இலங்கை, பர்மா, திபெத்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், இந் தோனீசியா, ஜப்பான் ஆகிய நாடு களிலும் பலர் விநாயகரை வணங்குகின்ற னர். விநாயகரை வழிபடுவதற்கு உரிய நன்னாள் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி யாம். அன்று விநாயக சதுர்த்தி விழா வாகக் கொண்டாடுகின்றனர்.