பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வியாசர் - விலங்கியல்

பல ஆண்டுகள் நடந்த இப்போர் 1973 தொடக்கத்தில் முடிவுற்றது. சமரச உடன்பாடும் ஏற்பட்டது. வியாசர் : பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தை (த.க.) முதன் முதலில் வடமொழியில் இயற்றியவர் வியாசர். இவர் வசிட்டரின் பேரரான பராசர முனிவரின் மகன். வேதங்களைத் தொகுத்தவர் வியாசரே. பதினெட்டுப் புராணங்களை எழுதியவரும் இவரே என்று சொல்லப்படுகிறது. வடமொழியில் இரா மாயணத்தை இயற்றிய வான்மீகிக்கு அடுத்து மகாகவியாக வியாசர் போற்றப் படுகிறார். வேதங்களை நான்காக வகுத்ததால் இவரை வேத வியாசர் என்றும் அழைப் பார்கள். வில்லிபுத்தூரார் : மகாபாரதத்தைத் தமிழில் பாடிப் புகழ் பெற்றவர் வில்லிபுத்தூரார். இவர் தென் - ஆர்க் காடு மாவட்டத்தில் திருமுனைப்பாடி யைச் சேர்ந்த சனியூரில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் வீர ராகவன். வில்லிபுத்தூரார் தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமை பெற்றார். இவர் வைணவராக இருந்தாலும் சிவனைப் பற்றிப் பேச நேரிடும்போதெல்லாம் உயர்வாகவே பேசுகிறார். தமிழ்நாட்டு மூவேந்தர்களும் இவரைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கியுள்ளனர். வரபதி ஆட்கொண்டான் என்னும் அரசன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகை என்னும் ஊரிலிருந்து அவன் ஆட்சிசெய்தான். பாரதக் கதையைத் தமிழில் இயற்றித் தருமாறு அந்த அரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வில்லிபுத்தூரார் பாரதத்தைத் தமிழில் பாடினார் என்று சொல்லப்படுகிறது. வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி வில்லிபுத் தூரார் பாரதக் கதையைத் தமிழில் சுருக்கமாகப் பாடியுள்ளார். சொற் சுவையும், பொருட்சுவையும் மிக்க 4,339 பாடல்களைப் பாடியுள்ளார். வில்லி புத்தூரார் தமது நூலில் பாரதக் கதையை 18 பருவங்களுள் பத்துப் பருவங்களே பாடியுள்ளார். நல்லாப் பிள்ளை, முருகப்பிள்ளை என்பவர்கள் இவர் பாடிய நாலாயிரம் பாடல் களுடன் முறைப்படி நாட்டுப் படலம், நகரப் படலம் சேர்த்து, தாமே வேறு பதினோராயிரம் பாடல்களைப் பாடி மு.த லிலும், இடையிலும்,கடையிலும்


சேர்த்து பாரதத்தை முடித்துள்ளார்கள். வில்லிபுத்தூரார் காலம் பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதி ஆகும்.

விலங்கியல் (Zoology) : புழு, பூச்சி, நண்டு, நத்தை , மீன், பாம்பு, தவளை, பறவைகள், விலங்குகள் முத லான உயிர்களைப் பற்றி ஆராய்வது விலங்கியல். அதாவது, தாவரமல்லாத மற்ற எல்லா உயிரினங்களும் விலங்கிய லில் அடங்கும்.

விலங்கியலில் பல பிரிவுகள் உள்ளன. ஓரணு உயிரினங்களாகிய புரோட்டோ சோவா (த.க.) பற்றி ஆராய்வது புரோட்டோசோவாவியல் எனப்படும்; பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சி பூச்சி யியல். ஆடு, மாடு, நாய், பூனை முதலிய பாலூட்டிகளைப் பற்றியது பாலூட்டி யியல்; பறவைகளைப் பற்றியது பறவை யியல்; பாம்பு, பல்லி போன்ற ஊர்வன பற்றியது ஊர்வனவியல் ; மீன்களைப் பற்றி ஆராய்வது மீனியல். விலங்குகள் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவற்றின் உருவமும் பண்பும் அமைந்திருப்பது உண்டு. இதுபற்றி ஆராய்வது விலங்குச் சூழ்நிலையியல் (Animal Ecology) எனப் படும். இவை தவிர, விலங்குகளின் உடலமைப்பின் அடிப்படையிலும் பல பிரிவுகள் உள்ளன. ஆனால், எல்லா விலங்குகளுமே சிறிய உயிரினங்களி லிருந்து. படிப்படியாக உருமாறி வளர்ச்சி அடைந்தனவாகும். இதனைப் பரிணாமம் (Evolution, த.க.) என்ப ர். இது விலங்கியலில் ஒரு முக்கியத் தத்துவ மாக இடம் பெற்றுள்ளது. மனிதனும் இப் பரிணாம வளர்ச்சியடைந்து மாறியவனே. விலங்குகளுக்கிடையே காணப்படும் சில ஒற்றுமைகளின் அடிப்படையில் அவற்றைப் பாகுபடுத்தியுள்ளனர். உதா ரணமாக, எல்லாப் பூனைகளும் ஒரே இனத்தைச் (Species) சேர்ந்தவை. ஆனால் பூனைக்கும் புலி, சிங்கம் ஆகிய வற்றுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. ஆகவே, மூன்றும் ஒரே சாதியில் (Genus) சேர்க்கப்படுகின்றன. பூனைக்கு விலங் கியலில் பீலிஸ் டொமெஸ்ட்டிக்கா (Felis domestica) என்று பெயர். இதில் பீலிஸ் என்பது சாதியையும் டொமெஸ்ட்டிக்கா என்பது இனத்தையும் குறிக்கும். புலிக்கு விலங்கியல் பெயர் பீலிஸ் டைக்ரிஸ், சிங்கத்திற்கு பீலிஸ் லீயோ. இவ்வாறு ஒவ்வொரு விலங்குக்கும் விஞ்ஞான முறை யில் பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளை இவ்வாறு முதலில் பாகுபடுத்தியவர் சுவீடன் நாட்டு விஞ்ஞானி லின்னேயஸ் (1707-1778) என்பவர்.