பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விலங்குக்காட்சிசாலை - விலங்குகள்



விலங்குக்காட்சிசாலை : ஆடு, மாடு, குதிரை, நாய் முதலிய விலங்குகளை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். ஆனால் காண்பதற்கு அரியனவான சிங்கம், புலி, சிறுத்தை , கரடி, காண்டாமிருகம் வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி முதலிய விலங்குகளைப் பார்க்கவேண்டுமானால் விலங்குக்காட்சிசாலைக்குச் செல்லவேண் டும். விலங்குக் காட்சிசாலைக்குச் செல்வ தென்றால் குழந்தைகளுக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகம். இந்தியாவில் சென்னை, பம்பாய், கல்கத்தா, புது டெல்லி , மைசூர், ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் விலங்குக்காட்சிசாலைகள் உள்ளன. லண்டன், நியூ யார்க் , பெர்லின் முதலிய நகரங்களில் உள்ள விலங்குக்காட்சி சாலைகள் மிகப் பெரியவை; உலகப் புகழ் பெற்றவை. உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல வகை விலங்குகளை நாம் விலங்குக் காட்சிசாலையில் கண்டு மகிழலாம். கொடிய விலங்குகளை வலை அல்லது கம்பியால் கட்டப்பட்ட பெரிய கூண்டு களில் அடைத்து வைத்திருப்பதால் அவற்றை அச்சமின்றி நேரில் பார்க்க முடியும். சிங்கம், புலி, யானை, ஒட்டகம், மான், குரங்கு, நரி, முயல், முள்ளம் பன்றி, முதலை, நீர்யானை போன்ற பல விலங்குகளையும், அன்னம், பஞ்சவர்ணக் கிளி, கொக்கு, கூழைக்கடா, மயில் முதலிய பலவிதமான பறவைகளையும், பலவகையான பாம்புகளையும், அழகான பலவண்ண மீன்களையும் இங்குக் காண லாம். இவை ஒவ்வொன்றும் வாழ் வதற்கேற்ற இயற்கை வசதிகளை இங்கு உருவாக்கி, இவற்றைப் பாதுகாத்து வருகிறார்கள். உதாரணமாக, துருவப் பிரதேசத்தைச் சேர்ந்த பனிக்கரடிக்குக் குளிர்ந்த சூழ்நிலை இருக்கவேண்டும்;


விலங்குக்காட்சிசாலையில் ஒட்டகச் சிவிங்கிகள்

விலங்குக்காட்சிசாலையில் ஒட்டகச் சிவிங்கிகள்


நியூ யார்க் விலங்குக்காட்சிசாலையில் உள்ள
இந்திய யானைக்குட்டி

வெப்பமண்டலத்தைச் சேர்ந்த குரங்கு களுக்கு வெப்பமான சூழ்நிலை வேண்டும்; இல்லையெனில் அவற்றால் வாழமுடியாது. விலங்குகளுக்கு உணவு அளிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இவை இயற்கையாக உண்ணும் உண வுடன் வைட்டமின்களும் கலந்து கொடுப் பது உண்டு. விலங்குகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்து வர்களும் இருப்பார்கள்.

விலங்குக் காட்சிசாலையில் உள்ள விலங்குகளைத் தொட்டுப் பார்க்க முயலக் கூடாது. கூண்டுகளுக்குள் கையை நீட்டு வது ஆபத்து. விலங்குகள் தின்பதற்கு நாம் எதையும் - கொடுக்கவும் கூடாது. நாம் கொடுக்கும் தின்பண்டங்களால் அவற்றுக்குத் தீங்கு நேரிடலாம்.

விலங்குகள் : பசு நமக்குப் பால் கொடுக்கிறது. நாய் வீட்டைக் காவல் காக்கிறது. வண்டி இழுக்கக் குதிரை உதவு கிறது. இவையெல்லாம் நமக்கு மிகவும் பயனுள்ள விலங்குகள். ஆடு, எருமை, யானை, குதிரை, கழுதை முதலியன நாம் சாதாரணமாகப் பார்க்கக் கூடியவை. சிங்கம், புலி, சிறுத்தை , காண்டாமிருகம் முதலியன காட்டில் வாழும் கொடிய விலங்குகள். விலங்குக் காட்சிசாலைக்குச் சென்றால் உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த பலவிதமான விலங்குகளைப் பார்க்கலாம். பறக்கும் வௌவாலும் நீரில் வாழும் திமிங்கில மும் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க் கும் விலங்கு இனத்தைச் சேர்ந்தனவே. உயிர்வாழ்வனவற்றுள் புழு, பூச்சி, ஊர்வன, பறவைகள், விலங்குகள் முத லியன யாவும் விலங்கியல் என்ற பிரிவில் அடங்குமென்றாலும், குட்டி போட்டுப் பாலூட்டுவனவற்றையே பொதுவாக விலங்குகள் என்று சொல்கிறோம்.