பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விலங்குகள்


உலகின் எல்லாப் பகுதிகளிலும் விலங் குகள் உள்ளன. ஆடு, மாடு போன்ற விலங்குகளை எல்லா நாடுகளிலும் காண லாம். ஆனால் சில விலங்குகள் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. காங்கரு (த.க.) ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. விலங்குகளில் ஆடு, மாடு, குதிரை, கழுதை, யானை, ஒட்டகம் போன்றவை தாவரங்களை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. இவற்றுக்குத் தாவரந்தின்னிகள் (த.க.) என்று பெயர். இலை, தழை, தானியம் போன்ற தாவர உணவை அரைத்துத் தின்பதற்கேற்றபடி இவற்றின் பற்கள் உள்ளன. சிங்கம், புலி போன்றவை பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலா லுண்ணிகள் (த.க.). புலாலைக் கிழித்துத் தின்பதற்கேற்றபடி இவற்றுக்குக் கூரிய பற்களும் கால்களில் கூர்மையான நகங் களும் உண்டு.

நாய், பூனை, பன்றி முதலிய விலங்குகள் ஒரு தடவையில் பல குட்டிகளை ஈனு கின்றன. ஆனால் பசு, யானை போன்றவை ஒரு தடவையில் ஒரு கன்றே ஈனும். சில விலங்குகளின் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்கத் தொடங்கி விடுகின்றன. ஆனால் நாய், பூனை முதலியவற்றின் குட்டிகள் செயலற்ற தாகவும் கண் திறக்காமலும் இருக்கும். இவற்றைத் தாய் விலங்குகள் பல நாட் களுக்குப் பாதுகாத்து வரும். குட்டிகளைத் தாய் விலங்குகள் வளர்க்கும்போது அவற்றுக்கு உணவு தேடவும் பகைவர் களிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கின்றன.

ஆடு, மாடு, எருமை, மான் முதலிய வற்றுக்குத் தம்மைக் காத்துக்கொள்ளக் கொம்புகள் உள்ளன. மானும் முயலும் வேகமாக ஓடித் தப்பித்துக் கொள்ளும். முள்ளம்பன்றிக்கு உடல் முழுவதும் நீளமான. முட்கள் உள்ளன. ஆபத்து ஏற்படும்போது இந்த முட்களை அது சிலிர்த்துக்கொள்ளும். பகை விலங்குகள் நெருங்கமாட்டா. சில விலங்குகளுக்கு அவை வாழும் சூழ்நிலையே தகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. பனி உறைந்த துருவப் பிரதேசத்தில் வாழும் பனிக் கரடியின் நிறம் வெண்மையாக இருக்கும்; எனவே அங்கு அந்தக் கரடியை எளிதில் கண்டு கொள்ள முடியாது. இதைப் போன்று பல விலங்குகளுக்குப் பாது காப்பு நிறம் (த.க.) அமைந்திருக்கிறது. காடுகளில் யானை, மான், எருமை முதலிய விலங்குகள் தனித்தனிக் கூட்ட மாக வாழ்கின்றன. ஒவ்வோர் இனக் கூட்டத்திற்கும் வயது முதிர்ந்த விலங்கு

தலைமை வகிக்கும். அந்த விலங்கைப் பின்பற்றி மற்ற விலங்குகள் நடக்கும். விலங்குகளில் புத்தி கூர்மையானது குரங்கு. இதனைச் சிலர் பழக்கி வித்தை காட்டுவது உண்டு. சர்க்கஸ் காட்சிகளில் யானை, குதிரை, சிங்கம், புலி, கரடி முத லிய விலங்குகள் வித்தை செய்வதை யும் நீங்கள் பார்த்திருக்கலாம். விலங்கு களில் அதிக காலம் வாழக்கூடியது யானை. இது 70 முதல் 100 ஆண்டுகள் வரை வாழும்.

விலங்குகளால் மனிதனுக்குப் பல நன்மைகள் உண்டு. ஆடு, மாடு முதலியவை பால் கொடுப்பதுடன் இறைச்சிக்கும் பயன்படுகின்றன. ஆட்டு ரோமம் கம்பளி தயாரிக்க உதவுகிறது. செருப்பு, சேணம், பணப் பை, பந்து, இடை வார் முதலியன விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் களாகும். கழுதையும் ஒட்டகமும் பொதி சுமக்கின்றன. காடுகளில் வெட்டிய பெரிய மரங்களை இழுத்துச் செல்ல யானை உதவுகிறது.

உருவில் பெரிய விலங்குகள் பல முற்காலத்திலிருந்தன. அவற்றுள் சில இனங்களை அக்கால மனிதர்கள் உண வுக்காக வேட்டையாடி அழித்துவிட்ட னர். யானை போன்ற உருவம் கொண்ட மாமதம், குகைக் கரடி முதலியவை இவ்வாறு அழிக்கப்பட்ட விலங்கு களாகும். சில விலங்குகளின் தன்மையை மனிதன் முற்றிலுமாக மாற்றி அமைத் துள்ளான். இன்று நாம் வளர்க்கும் நாய், வெகுகாலத்திற்கு முன்பிருந்த நாய் போன்றது அல்ல. மனிதன் நாயைப்

விலங்குகளுக்கும் தாய் அன்பு உண்டு. பகை விலங்குகளிடமிருந்து
காப்பதற்காகத் தாய்ப் பூனை, தன் குட்டிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும்.