பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இதனுள் விவேகாநந்தரின் வெண்கலச் சிலையை நிறுவியுள்ளனர். இம் மண்ட பத்தின் அடியில் தியான மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது.

விளக்கு : ஒளி இல்லாவிட்டால் நாம் எதையும் பார்க்க முடியாது. பகலில் சூரிய ஒளி நமக்கு உதவுகிறது. இரவிலும் இருட்டான அறைகளிலும் விளக்கு ஒளி உதவுகிறது.

பண்டைக்காலத்தில் தீ உண்டாக்கக் கற்றுக்கொண்ட குகை மனிதன், இரவு நேரத்தில் ஒளியைப் பெறுவதற்குத் தீப்பந்தங்களைப் பயன்படுத்தினான். பின்னர் உருகிய கொழுப்பை எரிபொருளாகக் கொண்ட விளக்கைச் செய்தான். குகை மனிதன் பயன்படுத்திய விளக்கை எகிப் தியர் திருத்தியமைத்தார்கள். குழிவான கல்லில் பஞ்சைக் கொண்டு திரியிட்டு அவர் கள் தம் விளக்கை அமைத்தனர். இந்தி யாவில் மிகப் பழங்காலத்திலிருந்தே அகல் விளக்குகள் பயன்பட்டு வந்தன. சுட்ட மண், உலோகக் கலவை ஆகியவற்றால் செய்த விளக்குகளை கிரேக்கரும், ரோமா னியரும் செய்தார்கள். அவற்றுக்கு ஆளிவிதை எண்ணெய் எரிபொருளாகப் பயன்பட்டது. மெழுகுவத்தியும் பின்னர் பயன்படுத்தப்பட்டது.

மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டதும் அதை விளக்குகளில் எரி பொருளாகப் பயன்படுத்தினர். இதனால் மற்ற எண்ணெய் விளக்குகளைப் பயன் படுத்தும் வழக்கம் குறைந்தது. காலப் போக்கில் கண்ணாடியாலான 'சிமினி' எனப்படும் புகைபோக்கி விளக்குகளை அமைத்தார்கள். இதனால் புகை குறைந்து ஒளி மிகுந்தது. காற்றினால் அணைந்து விடாமல் எரியும் அரிக்கேன் ( Hurricane ) விளக்கு பின்னர் தயாரிக்கப்பட்டது.

அடுத்து, மிக அதிக ஒளி தரக்கூடிய பெட்ரோமாக்ஸ் (Petromax) எனப்படும்

..

சர விளக்கு


ஆவிவிளக்கு உருவாக்கப்பட்டது. இவ் விளக்கில் மண்ணெண்ணெயின் மீது காற்றின் அழுத்தம் வினைப்படுவதால் ஒரு குழாயிலுள்ள சிறிய துளையின் வழியே மண்ணெண்ணெய் பீறிட்டு, மான்டில் ( Mantle) எனப்படும் வலையினுள்ளே வெப்பத்தால் ஆவியாகிறது. இந்த ஆவி எரிந்து மான்டிலை ஒளிரச் செய்கிறது.

இன்று பலவகை மின்சார விளக்குகள் பயன்படுகின்றன. மின்சார விளக்கினுள் அமைந்திருக்கும் டங்ஸ்ட்ட ன் கம்பி இழைகளின் வழியாக மின்சாரம் பாயும் போது, அந்தக் கம்பி சூடேறி ஒளிருகிறது. பாதரச ஆவி விளக்கில் பாதரசம் ஆவி யாகிப் பிரகாசிக்கிறது. ஒளிரும் விளக்கு களில் (Fluorescent lamps ) நீளமான கண்ணாடிக் குழாயின் உட்புறத்தில்

கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரம்
விளக்கொளியில் விளையாட்டு