பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெண்ணெய் - வெண்பிறவி


74.

இதற்குப் பயன்படுவது வார்ப்பு வெண் கலம் ஆகும். இதில் செம்பு 85%, வெள் ளீயம் 5%, துத்தநாகம் 6%. காரீயம் 4%. இது கெட்டியானது; எளிதில் உருகக்கூடியது; வார்ப்பட வேலைகளுக்கு மிகவும் ஏற்றது.

எந்திரங்களில் ஒருபகுதி இன்னொரு பகுதியுடன் உராயும் பொழுதோ, அல்லது சுற்றும் பொழுதோ குறைந்த அளவு உராய்வு (த.க.) உள்ளவாறு அமைக்கப்படும் சாதனம் தாங்கி ( Bearing ) எனப்படும். இந்தத் தாங்கி களைச் செய்வதற்கு 82% செம்பு, 16% வெள்ளீயம், 2% துத்தநாகம் கலந்த ஒரு வகை வெண்கலம் பயன்படுகிறது. 88% செம்பும், 10% வெள்ளீயமும், 2% துத்தநாகமும் சேர்த்துச் செய்யப்படும் ஒரு கலவை துப்பாக்கி வெண்கலம் (Gun metal) எனப்படும். இது கடற்படை வேலைகளுக்கும், நீராவி தொடர்பான வேலைகளுக்கும் ஏற்றது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெண்கலத்தை மனிதன் பயன்படுத்தி யுள்ளான். பாறைகளில் கலந்துள்ள செம்புத் தாதும், வெள்ளீயத் தாதும் இயற்கையான வெப்பம், அழுத்தம் கார ணமாக ஒன்று சேர்ந்து வெண்கலம் ஆயிற்று. ஆதிமனிதன் பாறைகளை உடைத்தபோது, இந்த வெண்கலத்தைக் கண்டெடுத்தான். செம்பைவிட வெண் கலம் கடினமாக இருந்ததைக் கண்டு, கருவிகளும் ஆயுதங்களும் செய்ய அதைப் பயன்படுத்தினான். இவ்வாறு வெண் கலத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் வெண்க லக் காலம் (Bronze Age) எனப்படும். பின்னர் இரும்புக் காலம் ( Iron Age) தொடங்கியது. கருவிகள் செய்ய வெண்கலத்தைவிட இரும்பு சிறந்தது எனக் கண்டு இரும்பைக்கொண்டு செய்யத் தொடங்கினார்கள்.

வெண்ணெய் : ரொட்டியில் வெண் ணெய் தடவிச் சாப்பிடுகிறோம் அல்லவா? பசு, எருமை ஆகியவற்றின் பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கிறார்கள். ஆட்டுப் பாலிலிருந்தும் வெண்ணெய் எடுப்ப துண்டு . திபெத்தில் கவரிமா (த.க.) என்னும் விலங்கின் பாலிலிருந்து வெண் ணெய் எடுக்கிறார்கள். வெண்ணெயை உருக்கி நெய்யாகவும் பயன்படுத்துகிறோம். பாலில் கொழுப்புப்பொருள் உள்ளது. இந்தக் கொழுப்புப் பொருளைப் பிரித்துத் திரட்டி எடுத்தால் அதுவே வெண்ணெ யாகும். பாலைக் காய்ச்சிச் சிறிது ஆற வைத்து அதில் சில துளிகள் மோரை ஊற்றுவார்கள். மோரில் உள்ள ஈஸ்ட்டு

(த.க.) என்னும் நுண்ணுயிர்கள் பெருகிப் பாலைத் தயிராக மாற்றுகின்றன. தயிரில் நீரை ஊற்றிக் கடைந்தால் அதிலுள்ள கொழுப்புப் பொருள் பிரிந்து மிதக்கும். அதைத் திரட்டி எடுத்தால் வெண் ணெயாகும். எஞ்சியுள்ளது மோராகும்.

பாலைத் தயிராக மாற்றாமலே பாலைக் கடைந்து நேரடியாக வெண்ணெய் எடுப்ப தும் உண்டு. பெரிய பால்பண்ணைகளில் எந்திரத்தின் உதவியால் இவ்வாறுதான் வெண்ணெய் எடுக்கிறார்கள்.

வெண்ணெயில் கொழுப்புச் சத்துடன் சிறிது புரதச்சத்தும், A, D ஆகிய வைட்ட மின்களும் உள்ளன. எனவே நம் உணவில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெண்பிறவி (Albino) : பல வண்ண ங் களைக்கொண்ட அழகிய மயிலை நாம் சாதாரணமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் முற்றிலும் வெள்ளை நிறம் கொண்ட சில மயில்களும் உள்ளன. இவற்றின் தோகைகளும் இறகுகளும் முற்றிலும் வெள்ளையாக இருக்கும். சில விலங்குக்காட்சிசாலைகளில் வெள்ளை மயிலைப் பார்க்கலாம். இதுபோலவே, வெள்ளை நிறக் காக்கைகளும் சில அரிதாகக் காணப்படுவது உண்டு. இவ் வாறு, இயல்பான நிறமல்லாது, வெள்ளை நிறம் பெற்றுள்ளவையே வெண்பிறவிகள்.

விலங்குகளிலும் வெண்பிறவி உண்டு. ஆப்பிரிக்காக் கண்டத்தில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் சில வாழ்கின்றன. அணில்களில் சில வெள்ளை நிறத்தில் உள்ளன. இவை யாவும் மிக அரிதாகவே காணப்படுபவை.

மனிதர்களிலும் வெண்பிறவித்தன்மை உள்ளவர்கள் சிலர் உண்டு. இவர்கள் அதிக வெண்மை நிறமாக இருப்பார்கள். தலைமயிர் வெண்மையாகவோ செம்

வெள்ளை மான்கள்