92 வேளாண்மை
நீர்ப்பாசனம் மூலம். பயிர்த்தொழில் களைச் செய்யும் முறை கண்டுபிடிக்கட் பட்டதும், வேளாண்மைத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. கிணறு கள், குளங்கள், அணைகள், நீர்த்தேக்கங் கள், கால்வாய்கள் முதலிய பாசனத் 'இட்டங்கள் வாயிலாக அதிகமான நிலங் களைச் சாகுபடிக்குக் கொண்டுவர முடிந் தது. பாலைவனப் பகுதிகளைக்கூடச் செழிப்பான சாகுபடி நிலமாக இன்று மாற்ற முடியும். ட்
வளர்ந்துவரும் விஞ்ஞானம். வேளாண் மைக்குப் பெருமளவில் பயன்படுகிறது. குறைந்த நிலத்தில் நிறைந்த அளவு விளைச்சல் உண்டாக்குவதற்கான வ முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகிறார்கள். பயிர்களைப் பூச்சிகளும், நோய்களும் தாக்காமல் பாதுகாக்கவும் வழிகள் வகுக்கப்படுகன்றன. விளை பொருள்களைக் கெடாமல் நீண்டகாலம் சேமித்துவைக்கவும் வழிவகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பயிர்களைச் செழித்து வள௱ச் செய்யக்கூடிய நல்ல ரசாயன உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. கலப் பின (த.க.) மூறைகள்மூலம் ஊட்டச் சத்து மிகுந்ததும் அதிக விலாச்சல் தரக் கூடியதுமான விதைகள் உருவாக்கப் படுகின்றன. உழவர்களுக்குச் சாதகமான காலநிலையை அறிவித்து வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் வேளாண்மைக்கு உதவி வருகின்றன. வேளாண்மை இன்று ஒரு தனி விஞ்ஞான மாகவே வளர்ந்
துள்ளது. பல முக்கிய நாடுகளில் வேளாண்மைக் கல்விக்கென்று தனிக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன.
நாட்டுக் கலப்பையுடன் உழவன்
எந்திரங்களின் உதவியால் பருத்தி பறித்தல்
இந்தியா ஒரு வேளாண்மை நடு. வெப்பமண்டல, மிதவெப்பமண்டலப் பயிர்கள் யாவும் இங்குச் சாகுபடியா கின்றன. நெல், கோதுமை, பருத்தி, கரும்பு, பருப்புவகைகள், எண்ணெய் வித்துகள், தேயிலை ஆகியவை இந்தியா வின் முக்கியப் பயிர்கள். கரும்பு பயிரிடு வதில் இந்தியா முதலிடம் வ௫ூக்கிறது; பருத்தியில் அமெரிக்காவை அடுத்து இடம் பெற்றிருக்கிறது. சிறுதானிய உற்பத்தியில் முதன்மை பெபற்றுள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. தேயிலை விளைச்சலில் இந்தியாவும் சீனாவும் முத லிடம் வ௫க்கின்றன. க
இந்திய நாட்டின் தேசீய வருமானத். தில் 485%.வேளாண்மைத் தொழில் வாயி லாகவே கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில்பெரும்பங்கு வேளாண்மைப் பொருள்களேயாகும். இந்திய மக்களில் ஏறக்குறைய 80% பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர் களுக்குத் தானியங்களே முக்கிய உணவுப் பொருள்களாகவும் உள்ளன.
புது டெல்லியிலுள்ள “இந்திய வேளாண்மை ஆராய்ச்சி லையம் * (ரோள்க. திதார்பேர்ரயாவ் 02கரட 1861/4016) வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சிகள் நடத்துவதுடன் பட்ட மேற்படிப்புக் கல்லியும் கற்பித்து வருகிறது. தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் ஒரு வேளாண் மைப் பல்கலைக்கழகம் நிறுவப் பட்டுள்ளது.