பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெண்ணின் தாயார் இதுகேட்டுப்
பெரிதும் வருத்தம் கொண்டாளாம்.

‘ஐயோ, தலைவிதி’ என்றெண்ணி
அங்கும் இங்கும் நடந்தாளாம்.

* * *


வந்தவர் சாப்பிடப் பானையிலே
வாங்கி வைத்த பாலையெலாம்

சந்தடி யின்றி மாப்பிள்ளை
சமையல் கட்டில் தீர்த்தாராம் !

திருடித் திருடிப் பாலையெல்லாம்
தீர்த்துக் கட்டும் மாப்பிள்ளையைப்

பார்த்து விட்டாள், பெண் தாயார்;
பலத்த சத்தம் போட்டாளாம்.

உடனே அங்கே எல்லாரும்
ஒன்றாய்க் கூடி வந்தனராம்.

மாப்பிள்ளைப் பூனை வழியின்றி
மத்தியில் நின்று விழித்தாராம் !

* * *


‘திருட்டுப் பிள்ளைக்கு என்பெண்ணைத்
திருமணம் செய்ய முடியாது !

8