பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உருவப்படம்

“என்றன் படத்தைப் பெரிதாக
எழுதித் தந்திட வேண்டு”மெனச்
சொன்னர் கனவான் ஒருவருமே,
சித்திர நிபுணர் ஒருவரிடம்.

பத்தே நாளில் அவர்உருவப்
படத்தை எழுதித் தந்திடவே
ஒத்துக் கொண்டார் ஓவியரும்.
உடனே, வேலை தொடங்கினரே.

தவணை சொன்ன நாள் தனிலே
தமது நாயுடன் கனவானும்
அவரது படத்தைப் பார்த்திடவே
ஆவல் பெருகச் சென்றனரே.

எழுதிய படத்தை ஓவியரும்
எடுத்துக் காட்டினர் அவரிடத்தே.
அழகாய் அப்படம் அமைந்திருந்தும்,
அந்தக் கனவான் குறைசொன்னார் :

112