பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பையன் :

காட்டை நோக்கிப் போகவா ?
கல்லும் முள்ளும் குத்துமே !

அம்மா, அப்பா, பாட்டியை
ஐயோ, விட்டு வருவதா ?

இருட்டிப் போனால் விளக்குமே
இல்லை அந்தக் காட்டிலே,
 
சிங்கம், கரடி, புலியுமே
சீறி வந்து கடிக்குமே !

மான் :

அப்ப டித்தான் எனக்குமே
அதிகக் கஷ்டம் இல்லையோ ?

சுற்றத் தார்கள் வருவரோ ?
துள்ளிச் சுற்ற முடியுமோ ?

ஆசை கொண்ட உணவையும்
அடைந்து தின்னக் கூடுமோ ?
 
கழுத்து நோக என்னையார்
காட்டில் கட்டிப் போடுவார் ?

*


இதனைக் கேட்ட அவன்மனம்
இளகிப் போச்சு மெத்தவும்.

‘ஐயோ, பாவம், ஐயையோ !
அவிழ்த்து விட்டேன்; ஓடிடு’

11