பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எலி -
ஆசை காட்டி மோசம் செய்யும்
அற்பப் பூனையே,
அசடு நானும் அல்ல, அல்ல.
அறிந்து கொள்ளுவாய்.

பூனை-
அடடா ! இதுபோல் நீயும் என்னை
நினைக்க லாகுமோ ?
அருமை யான பண்டந் தன்னை
மறுக்க லாகுமோ ?

இனிப்பை நானும் தின்ப தற்கா
வருந்தி அழைக்கிறாய் ?
இல்லை; இல்லை. என்னைப் பிடித்துத்
தின்னப் பார்க்கிறாய்.

உலகில் உள்ள பண்டம் யாவும்
கிடைப்ப தாயினும்,
உயிரைக் கொடுக்க உலகில் எவரும்
துணிந்து வருவரோ ?

வளையை விட்டே உனது வயிற்றில்
வந்து சேர்ந்திட
மடைய னல்ல. வழியைப் பார்த்து
கடையைக் கட்டுவாய் !

21

2960-2