பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘சத்தம் சிறிதும் போதாதே
ஜாக்கிர தை!’யென மிரட்டினரே,

‘அறையின் சாவி கொடுத்திடுவாய்.
அல்லது மண்டை உடைந்துவிடும்’

என்றவர் கூற சரஸ்வதியும்
எடுத்துக் கொடுத்தாள் சாவிதனை.

அறையைத் திறந்து ஆவலுடன்
அவர்களில் மூவர் நுழைந்தனரே.

நால்வரில் ஒருவன் சரஸ்வதியை
நகரா திருந்து காத்தனனே.
 
எண்ணம் பலப்பல சரஸ்வதிக்கு
எவ்வெவ் வாறோ தோன்றினவே.

யுக்தி ஒன்று உதித்திடவே
உடனே அந்தத் திருடனிடம்,

‘உள்ளே பங்கு போடுகிறார்,
உனக்குச் சிறிதும் இல்லாமல்,

ஏமாந் தேநீ போகாதே!
எழுந்து உள்ளே பார்த்திடுவாய்’

28