பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றே கூறிட அத்திருடன்,
எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே.

விரைவில் சென்று சரஸ்வதியும்
‘வெடுக்’கெனக் கதவைப் பூட்டினளே !

திருடர் நால்வரும் அறைக்குள்ளே
‘திருதிரு’ எனவே விழித்தனரே !

சரஸ்வதி தெருவில் வந்தனளே;
சத்தம் போட்டுக் கத்தினளே.

‘ஐயோ! திருடன்! ஐயையோ !
அபாய’ மெனவே அலறினளே.

ஊரார் எல்லாம் தடியுடனே
ஒன்றாய்க் கூடி வந்தனரே.

கதவைத் திறந்து திருடர்களைக்
கயிற்றால் கட்டி இழுத்தனரே.

காவல் நிலையம் சேர்த்தனரே;
கைதி யாக நிறுத்தினரே.

ஊரார் எல்லாம் சரஸ்வதியை
ஒருங்கே புகழ்ந்து பேசினரே.

29