பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர்க்கார் மெச்சி அவளுக்குத்
தகுந்த பரிசும் தந்தனரே.

சரவணன் இக்கதை கேட்டதுமே
சந்தோ ஷத்தால் பூரித்தான்.

‘சமயம் பார்த்து யுக்தியுடன்
சரியாய்க் காரியம் நீசெய்தாய்.

புத்தி மிகுந்த உன்னுடைய
புருஷன் ஆனேன்!’ எனமகிழ்ந்தான்.


30