பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ன நடக்குமோ?

ஐந்து பூனைக் குட்டிகள்
அணி வகுத்துச் சென்றன.
வெய்யில் கொளுத்தும் வேளையில்
வேக மாகப் போயின.

கடுக டுத்த முகத்துடன்
காலை எட்டிப் போட்டன.
படை யெடுக்கும் வீரர்போல்
பாய்ந்து பாய்ந்து சென்றன.

வேலைப் போல இருக்குமாம்
மிகவும் கூர்மை யாகவே
காலில் உள்ள நகங்களைக்
காட்டிக் கொண்டே சென்றன.

மீசை துடித்து நிற்கவே,
வியர்வை நன்கு சொட்டவே,
தூசி எங்கும் பறக்கவே
துரித மாகச் சென்றன !

31