பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கண்கள் இரண்டும் சிவக்கவே,
காதும் நிமிர்ந்து நிற்கவே,
என்ன கோபம், கோபமோ !
எங்கே அவைகள் போகுமோ ?

சீன வெடியைக் கொளுத்தியே
சின்னப் பூனைக் குட்டிமேல்
சீனு போட்டு விட்டதால்
தேம்பித் தேம்பி அழுததாம்.

அண்ணன் மாரி டத்திலே
அழுது கொண்டே வந்ததாம்;
கண்ணீர் வழிய நடந்ததைக்
கலக்கத் தோடே சொன்னதாம் !

கேட்ட வுடனே அண்ணன்மார்
கிளம்பி விட்டார்; சீனுவின்
வீட்டைத் தேடிச் செல்கிறார்.
மேலே என்ன நடக்குமோ ?


32