பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூனை பூனைதான்!



பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.

ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்தே அதனில் பார்த்ததுவே.

கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
‘சிறுத்தை நான்தான் எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே !’

பூனை இப்படி எண்ணியதே;
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து உடைத்து நொறுக்கியதே.

39