பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூனை பூனைதான்!



பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.

ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்தே அதனில் பார்த்ததுவே.

கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
‘சிறுத்தை நான்தான் எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே !’

பூனை இப்படி எண்ணியதே;
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து உடைத்து நொறுக்கியதே.

39