பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சென்றேன் அந்தக் கதவோரம்,
சிறிதும் அச்சம் இல்லாமல்.

‘மிரட்டிச் சென்ற அச்சத்தம்
மீண்டும் வந்தால் உடனேயே,

தட்டிய அந்தத் திருடனைநான்
தடியால் அடிப்பேன்’ எனுமுன்னே

‘கடகட’ எனவே மறுபடியும்
கதவில் சத்தம் எழுந்ததுவே.

‘பட்’டெனக் கதவைத் திறந்தேன்நான்.
பார்த்தேன் எல்லாப் பக்கமுமே.

யாரையும்அங்கே காணோமே!
‘யார் அவர்?’ என்றே நான்கேட்டேன்.

இதனைக் கண்ட தங்கையுமே
‘இடிஇடி’ எனவே சிரித்தனளே.

‘கதவைத் தட்டிச் சென்றதுவே
கண்ணில் தோன்றாக் காற்றுத்தான்!

அடித்திடும் காற்றை அடிப்பதற்கோ
அத்தனை வீரம்?’ என்றனளே!

44