பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பட்டு அழுது வருவதைப்
பார்த்த தாயும் அவளையே
கட்டி அணைத்துக் கொண்டனள்;
கார ணத்தை அறிந்தனள்.

வேக மாகப் பாலுவின்
வீடு நோக்கிச் சென்றனள்;
கோப மாகப் பாலுவைக்
குற்றம் சாட்டி வைதனள்.

பட்டு தாயார் வைவதைப்
பாலு தாயார் கேட்பளோ?
திட்ட லானுள், அவளுமே.
சிறிய சண்டை வளர்ந்தது.

இரண்டு தந்தை மார்களும்
இந்தச் செய்தி கேட்டதும்,
திரண்ட தோளைத் தட்டியே
தீர மாக வந்தனர்.

சண்டை வலுத்து விட்டது;
சத்தம் பெருக லானது;
கண்டு களிக்க மக்களும்
கணக்கில் லாமல் கூடினர்.

50