பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோழிக்குஞ்சின் கதை

பையன் :

கோழிக் குஞ்சே, உன் கதையைக்
கூறிடு நீயும் என்னிடத்தே.

கோழிக் குஞ்சு :

அண்ணா, கதையைக் கூறுகிறேன்.
அதைநீ நன்றாய்க் கேட்டிடுவாய்.

தாயின் வயிற்றில் சில நாட்கள்
தங்கி யிருந்தேன். அதன் பின்னே

மூலை ஒன்றில் என் அம்மா
முட்டை யாக இட்டனளே.

அதனைக் கண்ட ஒருமனிதன்
அவனது அருமை மனைவியிடம்

“முட்டை தோசை சுட்டுத்தா,
மிகவும் ஆசை” என்றிடவே,

“அடைக்கு வைப்போம் இதனைநாம்
அப்புறம் சிறிய குஞ்சுவரும்.

52