பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குஞ்சு வளர்ந்து சிலநாளில்
கோழி யாகும். அக்கோழி

தினமும் முட்டை இட்டுவரும்.
தின்ன லாமே இருபேரும்”

என்றனள். அவனும் ‘சரி’யென்றான்.
என்றன் உயிரும் தப்பியது !

அடியேன் முட்டைக் குள்ளேயும்
அம்மா முட்டை மேலேயும்

இருந்தோம் மிக்க பொறுமையுடன்
இருபத்தொருநாள் ஆயினவே.

எத்தனை நாள்தான் அடைபட்டு
இருப்பது என்ற கோபமுடன்

மூக்கால் முட்டையின் ஓட்டினைநான்
முட்டி உடைத்து வெளிவந்தேன்.

வந்ததும் என்னை என்அம்மா
மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.

நாட்கள் வளர இறக்கையுடன்
நானும் வளர்ந்து நடைபோட்டேன்.

53

2950-4