பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“தின்னத் தின்னப் பழங்களைத்
திருப்தி யோடு தருகிறேன்.
என்னை ஓங்கி அடிப்பதேன் ?
எனது தோலை உரிப்பதேன்?

நன்மை செய்த என்னைநீ
நன்றி கெட்டு வதைப்பதேன்?”
என்றே அந்த மாமரம்
எண்ணி ஏங்க லானதே !


56