பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணீர் சொரியும் மான் அதனைக்
கண்டார் ஜவகர். கண்டதுமே,
புண்ணாய்ப் போனது அவர்மனமும்.
கண்ணீர் விட்டார், அக்கணமே.

“துப்பாக் கிதனை இனிமேல்நான்
தொடவே மாட்டேன்; சத்தியமே.”
இப்படி உடனே கூறினரே.
என்றும் சொல்லைக் காத்தனரே

.



58