பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உற்சவம் ஒன்று பக்கத்து
ஊரில் நடந்தது கண்டிடவே
உற்சா கத்துடன் எல்லாரும்
ஒன்றாய்க் கூடிச் சென்றனரே.

தள்ளா வயது ஆனதனால்,
தந்தை மட்டும் போகவில்லை.
கள்ளன் ஒருவன் இரவினிலே
கதவை உடைத்தே உள்சென்றான்.

பந்தம் ஒன்றை வாயினிலே
பலமாய் வைத்துத் தூணூடனே
தந்தை தன்னைக் கட்டியபின்
தங்கம், வெள்ளி திருடினனே.

சட்டென அங்கே நாய்வந்து,
தாக்கிய தந்தத் திருடனையே!
வெட்டிய காயம் போலவேதான்
மேலெலாம் புண்கள் ஆயினவே!

குரைத்திடும் சத்தம் கேட்டதுமே
கூடியே ஊரார் வந்தனரே.
விறைப்புடன் ஓடிய திருடனையே
விரட்டிப் பிடித்தே உதைத்தனரே.

62