பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிளியின் நன்றி


கறுப்பன் பச்சைக் கிளியொன்றைக்
காட்டில் பிடித்து வந்திட்டான்.
அறுத்து விட்டான் சிறகுகளை.
அடைத்து வைத்தான் கூண்டினிலே,

தினமும் கறுப்பன் பழங்களெலாம்
தின்னக் கொடுப்பான். ஆனாலும்,
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.
வாழ்வும் கசந்து போனதுவே.

கறுப்பன் ஒருநாள் அக்கூண்டின்
கதவைத் திறந்தான். ஆனாலோ,
இறுக்கிச் சரியாய் மூடாமல்
எங்கோ விரைந்து போய்விட்டான்.

அலகால் கிளியும் அக்கூண்டை
அசைத்தே ஆட்டித் திறந்ததுவே.
உலகில் சுதந்திர மூச்சுடனே
உயரப் பறக்கக் கிளம்பியதே.

81