பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறுத்து விட்ட சிறகுகளோ
அதற்குள் எப்படி முளைத்துவிடும் ?
பறந்து செல்ல முடியாமல்
பட்டெனத் தரையில் வீழ்ந்ததுவே !

கீழே கிடந்த அக்கிளியைக்
கிழித்துக் கடித்துக் கொன்றிடவே,
பாழும் பூனை ஒன்றங்கே
பாய்ந்தே ஓடி வந்ததுவே !

கண்ணன் என்பவன் இக்காட்சி
கண்டதும் உடனே பூனைதனைக்
குண்டாந் தடியால் விரட்டினனே ;
கொஞ்சும் கிளியைக் காத்தனனே.

கருத்துடன் சிலநாள் வளர்த்தனனே
கண்ணன் அந்தக் கிளிதனையே.
சிறகுகள் நன்றாய் வளர்ந்தனவே ,
தெம்புடன் பறக்க முடிந்ததுவே.

காலையில் ஒருநாள் அக்கிளியைக்
கண்ணன் கையில் எடுத்தனனே.
சோலையை நோக்கிச் சென்றனனே.
சுகமாய்த் தடவிக் கொடுத்தனனே.

82