பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கண்ணன் அருகில் அக்கிளியும்
களிப்புடன் நெருங்கி வந்ததுவே.
அன்புடன் அதனைக் கண்ணனுமே
அனைத்துக் கொஞ்சி மகிழ்ந்தனனே !

இன்றும் அக்கிளி கண்ணனிடம்
இனிக்கும் ஆப்பிள் பழத்துடனே
நன்றி செலுத்த வருவதனை
நானும் அறிவேன், நண்பர்களே !


84