பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுய விளம்பரம்

தேசத் தலைவர், பெரியோர்கள்,
சினிமா நடிகர் படங்களெலாம்

வீடுகள், கடைகள் யாவிலுமே
விளங்கக் கண்டார் ஒருமனிதர்.

செல்வம் மிகுந்தவர் ஆதலினால்,
சீமான் என்றே அழைத்திடுவோம்.

‘நமது படமும் இப்படியே
நாட்டில் எங்கணும் விளங்கிடவே

வேண்டும்’ என்றே அச்சீமான்
விரும்பி யோசனை செய்தனரே.

“பற்பல நிறத்தில் தம்படத்தைப்
பளபளப் பான தாள்களிலே

அச்சிட வேண்டும் அழகாக.
அப்புறம் அந்தப் படங்களையே

93