பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உள்ளே இருந்த அவன்படத்தை
உடனே நன்றாய்க் கிழித்தெறிந்தேன்.

அதற்குப் பதிலாய் என்படத்தை
அழகாய் ஒட்டி வைத்துள்ளேன்.

இங்கே பாராய்!” என்றவனும்
எடுத்துக் காட்டினன் ஒருபடத்தை.

கேட்டனர் சீமான் அவ்வுரையை,
‘கிர்ர்’ ரெனத் தலையும் சுற்றியதே !

“அந்தோ, இதுபோல் என்படங்கள்
அனைத்தும் நாசம் ஆயினவோ !

எத்தனை ஆயிரம் செலவழித்தேன்
எல்லாம் வீண் வீண் !” என்றனரே.

96