பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது.

நித்தம், நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றிடும்;
கொத்தி வந்து இரைதனைக்
குஞ்சு தின்னக் கொடுத்திடும்.

'இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுவீர்.
இரையைத் தேடித் தின்னலாம்’
என்று குருவி சொன்னது.

'நன்று, நன்று, நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்’
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின.

9