பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாலைவ ழியிலோர் ஆலமரம்-அது
தங்க நிழலினைத் தந்தமரம்.
சாலைவழியாகச் செல்பவர்க்கு-அது
தளர்வு மாற்றியே நின்றமரம்.

களைத்து வருந்தியே வந்திடுவார்-அங்குக்
கால்வலி தீர அமர்ந்திடுவார்.
இளைத்த அவர்க்குமே இன்பம்தரும்-அன்றி
இன்னலும் தீர்த்து வழியனுப்பும்.

பள்ளிச் சிறுவர்கள் ஓடிவந்தே-அங்குப்
பற்பல ஆட்டங்கள் ஆடிடுவார்.
அள்ளியே சுள்ளிகள் சேர்த்திடுவார்-நல்ல
அந்தணர் வேள்வி நடத்திடவே.

காலைப் பொழுதிலே பல்துலக்க-அது
கனிவுடன் குச்சிகள் தந்திடுமே.
மாலைப் பொழுதினைப் போலதுவும்-என்றும்
மனங்கு ளிர்ந்திடச் செய்திடுமே.

27