பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன்
அரச மரத்தில் ஏறினன்;
பாடு பட்டுத் தழைகள் தம்மைப்
பறித்துக் கீழே போட்டனன்.

ஆசையோடு ஆட்டு மந்தை
அவற்றைத் தின்னும் வேளையில்,
நாச வேலை செய்ய எண்ணி
நாலு ஐந்து ஆடுகள்,

அம்பு பாய்ந்து பெயர்த்த தைப்போல்
அரச மரத்துப் பட்டையைக்
கொம்பி னாலே வேக மாகக்
குத்திப் பெயர்க்க லாயின.

அரசமரத்தில் இருந்த சிறுவன்
அந்தக் காட்சி கண்டதும்,
இறங்கி வந்து அவற்றைப் பார்த்து
இகழ்ந்து மிகவும் பேசினன் :

35